பக்கங்கள்

13 ஜனவரி 2012

ஜே.வி.பி.கிளர்ச்சிக்குழுவில் விடுதலையான தமிழ்ப் போராளிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துசெயற்படுவதாக ஜே.வி.பி. கிளர்;ச்சிக்குழு ஒப்புக் கொண்டுள்ளது. வட மாகாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில்முன்னாள் போராளிகள் இணைந்து கொண்டுள்ளதாக கிளர்ச்சிக்குழு உறுப்பினர் உந்துல் பிரேமரட்னதெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் 900 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 500 கைதிகளுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் புலிப் போராளிகள் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதனை மறுக்கவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிரிவினைவாத அமைப்புடனும் இணைந்து தாம் அரசியல்நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழர்கள் என்ற காரணத்தினால் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்புவாதம் தொடர்பான பிரச்சினைகளும் முக்கிய இடத்தை வகிப்பதாகத்தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோதிலும் வேறும் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலி உறுப்பினர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.