பக்கங்கள்

30 ஜனவரி 2012

வடக்கில் கடும் குளிர்!

வடக்கில் தற்போது கடுங்குளிர் காலநிலை நிலவி வருகிறது. இந்தியாவில் நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை வடக்கில் நேரடியாக தாக்கம் செலுத்தி வருவதாக வானிலை அவதானத்தின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி முதல் வடக்கில் வெப்பநிலை மாறுபட்டளவில் குறைவடைந்து வருவதாகவும் இதனால் அப்ப குதியெங்கிலும் பனிமூட்டம் ஏற் பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.இதேவேளை வடக்கின் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்ப நிலை ஓரளவு வீழ்ச்சியடைந்திருப்பதன் விளைவாக குளிர் காலநிலை நிலவி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
கிழக்கில் அதிகரித்த பனி காரணமாக மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.திடீர் காலநிலை மாற்றத்தையடுத்து காய்ச்சல், இருமல், தடிமல் நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உதடு மற்றும் குதிகால் வெடிப்பு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். குறித்த காலநிலையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும், பகலிலும் பனி தொடருவதனால் சிறுவர்களும் முதியவர்களும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். குளிர்கரணமாக பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டள்ளனர். குளிர் காலநிலையையடுத்து, வேளாண்மையும் நோய்த் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிகமான பிரதேச நெற்கானிகள் இலைசுருட்டி நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.