பக்கங்கள்

21 ஜனவரி 2012

சென்னையிலிருந்து கொழும்பு வரவிருந்த பெண் காணாமல் போயுள்ளார்!

சென்னையிலிருந்து விமானத்தில் கொழும்பு நோக்கி வரவிருந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான தானுஷா என்ற பெண்ணே இவ்வாறு விமான நிலையத்தில் காணாமல் போயுள்ளார்.
இவர் சுங்க, குடியுரிமை பிரிவுகளின் சோதனைகளை நிறைவு செய்துகொண்டு விமானத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தார்...
ஆனால் விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அவர் காணாமல் யோயுள்ளார். இதனால் 15 நிமிட தாமதத்திற்கு பின் குறித்த விமானம் புறப்பட்டுள்ளது.
விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, விமானம் புறப்பட்டு செல்லும் முன் ஒரு பெண் தனது போர்டிங் பாஸ் மற்றும் அனுமதி சீட்டுகளை தந்துவிட்டு வெளியே சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
போர்டிங் பாஸ் பெற்றபின் ஒரு பயணி வெளியே செல்ல அனுமதி கிடையாது என்பதனால் இவரை வெளியே செல்ல அனுமதித்த மத்திய தொழிற்படையினரிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்..
அத்துடன், அந்த பெண் கொண்டு வந்த பயணப்பையில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் நிலவியது, இதையடுத்து வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வந்து பயணப்பையை சோதனையிட்டபோது அதில் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையம் வந்த தானுஷா கடத்தப்பட்டாரா? இல்லை யாருடனாவது சென்றுவிட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.