பக்கங்கள்

20 ஜனவரி 2012

வீரராஜ்,குகன் ஆகியோரை கடத்தியது கத்துரு சிங்கதான் என சரத்பொன்சேகா தெரிவிப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான மற்றுமொரு ஹைகோப் வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 28 ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு முன்னர் முப்பது மாத சிறை தண்டனை விதித்துள்ளதால் ஹைகோப் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சட்ட அதிகாரம் இல்லை என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில் குறிப்பிட்ட, வழக்கை நடத்திச் செல்வதா என ஜனவரி 20ம் திகதி (இன்று) தீர்மானிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் முன்பு அறிவித்திருந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு மீண்டும் அடுத்த மாதம் 28 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பயங்கராவாத இயக்கம் ஒன்றின் தலைவரிடமிருந்து ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாவை பெற்று வந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் வீரராஜ், குகன் ஆகியோரைக் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தியவரும் மஹிந்த ஹத்துருசிங்கவே எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.