பக்கங்கள்

21 ஜனவரி 2012

வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள் என்பது இவருக்கு இப்போதுதான் புரிந்ததோ?

தென்பகுதி மாணவர்களை விட வடபகுதி மாணவர்கள் கடினமான முயற்சி உடையவர்கள். காலை வேளைகளிலேயே தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படித்து முன்னேறும் மாணவர்களை நான் வடபகுதியில் தான் பார்க்கின்றேன். இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட மட்டத்தில் க.பொ.த. உயர்தரத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட நான்கு துறைகளைச் சேர்ந்த மாணவர்களைப் பாராட்டும் வைபவம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நேற்று மாலை இடம் பெற்றது. இதன் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கல்விதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதுதான் சமுதாயத்தை வடிவமைக்கிறது. வடபகுதி மாணவர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர நிலையில் வைத்தே கல்வி போதிக்கப்படுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம், தேசிய ரீதியில் யாழ்.மாவட்ட மாணவன் முதலிடம் பெற்றதன் மூலம் முறியடிக்கப்பட் டுள்ளது.
இந்த மாணவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் அவர்கள் செய்த தியாகங்கள் என்பன பாராட்டப்பட வேண்டும். தென்பகுதி மாணவர்களை விட வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள்.
காலை வேளையில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் செல்வதை இங்குதான் பார்க்கின்றேன். இனி வருகின்ற மாணவர் சமுதாயத்துக்கு தேசிய மட்ட சாதனை புரிந்த இந்த மாணவர்களின் செயற்பாடுகள் முன் மாதிரியனவையாக இருக்கும்.
கல்வி நீண்ட பயணம். நீங்கள் பல்கலைக்கழகத்திலும் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.