பக்கங்கள்

02 ஜனவரி 2012

லலித்,குகன் விடுதலையை வலியுறுத்தி 5 இலட்சம் துண்டுப் பிரசுரம்.

லலித், குகன் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன நேற்றுத் தீர்மானித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக நாளை மறுதினம் முற்பகல் 10 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
காணாமற் போனோரைத் தேடியறியும் குழு, நவசமசமாஜக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம்,ஐக்கிய சோசலிஷக் கட்சி, சோஷலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலும், லலித், குகன் ஆகியோரின் விடுதலையை தொடர்பிலும் மேற்படி கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன முக்கிய சந்திப்பொன்றை நேற்று இராஜகிரியவில் நடத்தின. இதன் போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் யாழ்ப்பாணத்திலும் துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிப்போம் என காணமல் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழில் வைத்து லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்னர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.