பக்கங்கள்

07 ஜனவரி 2012

கட்டிடம் இடிந்து வீழ்ந்து தெல்லிப்பளையில் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உடல் நசிந்து உயிரிழந்துள்ளார். கட்டுவன் மேற்கைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான நாகராசா தர்மராஜா என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீள்குடியேற்றம் முழுமையாக மேற்கொள்ளப்படாத பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்த ஜன்னல் கம்பிகளை அகற்றுவதற்காக கட்டிடத்தினை இடித்த போது கட்டிடம் இடிந்து விழுந்ததினாலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.