பக்கங்கள்

22 ஜனவரி 2012

ஊர்காவற்றுறையில் போராளிகளை பயன்படுத்தி நண்டு வளர்ப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும், இராணுவத்தினரும் இணைந்து யாழ். தீவகப் பகுதியில் நண்டு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் முன்மொழிவின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியின் உத்தரவின்படி 3 மாதங்களுக்கு முன்னர் ஊர்காவற்றுறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நன்னீர் நண்டு வளர்ப்புக்கான சிறிய குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் 1.6 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ், ஒவ்வொன்றும் தலா 50, 40 அடி அளவுள்ள 16 நண்டு வளர்ப்புத் தடாகங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
இராணுவத்தினரின் 17வது பட்டாலியன் தளபதி லெப்ரினன்ட் கேணல் பிறேமவன்சவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. எதிர்காலத்தில் இதனோடு தொடர்புடைய நண்டு பதனிடல், சந்தைப்படுத்தல் தொழில்வாய்ப்புக்களும் கிடைக்கும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.