பக்கங்கள்

28 ஜனவரி 2012

பெற்ற பிள்ளையை வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்த தாய் தூக்கில் தொங்கினார்!

பெற்ற குழந்தையை கொன்று வீட்டின் பின்புறமாக புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தாய் துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மிட்கப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில் கிளிநொச்சி கண்ணகை புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் தவமணி (வயது 41) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மிட்கப்பட்டவராவார்.
நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்ததாக குறப்படும் இந்த குடும்பபெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கபடுகிறது.குறித்த குடும்ப பெண்ணின் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து விட்டிற்கு வந்த போது வீட்டின் அறைக்குள் தாயார் தூக்கில் தொங்கியதை கண்டதும் அருகில் இருந்த தமது அயலவர்களிடம் குறி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சடலம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றார். அதன் பின்னர் பொலிஸார் மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி பொது மருத்துமனையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த பெண் தான் பெற்ற குழந்தையை கொன்று வீட்டின் பின்புறமாக புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிஸாரால் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.