பக்கங்கள்

12 ஜனவரி 2012

சவேந்திர சில்வாவை மன்னிப்புக் கோருமாறு உத்தரவாம்!

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக உடனடியாக மன்னிப்புக் கோரும் படி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் ஊடகத்துறை அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விசாரிக்க சிறிலங்கா அதிபர் செயலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளைளுக்கு மகிந்த ராஜபக்ச நேற்று உத்தரவிட்டிருந்தார்.
எனினும், சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஏற்கனவே மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கூறியுள்ளதாகவும் ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.