பக்கங்கள்

09 ஜனவரி 2012

நெடுந்தீவிலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் பொலிசில் பதியவேண்டுமாம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் பொலிஸில் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே படகில் தங்கள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும். சில காலமாக இல்லாமல் இருந்த இந்தப் பதிவு நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்திருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
பதிவு நடவடிக்கைகளால் பெரும் நேரவிரயம் ஏற்படுவதால் , நேற்று நெடுந்தீவில் இருந்து படகு தாமதமாகவே புறப்பட்டுள்ளது.இதனால் பலரும் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பஸ்ஸைத் தவற விட்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மக்களை இடையூறுகளுக்குள் தள்ளும் இந்தப் பதிவு நடைமுறையைப் பொலிஸார் கைவிடவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.