பக்கங்கள்

06 ஜனவரி 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று சர்வமத பேரவை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மதத் தலைவர்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
“இனப்பிரச்சினைக்கு அனைத்து மக்களும் உணரக் கூடிய மற்றும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விரைவாக முன்வைக்க வேண்டும்.
நாட்டில் போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் இன்னும் உள்ளன. அவற்றை விரைவாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டத்தை நீக்கி 17 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை அற்றுப்போய் விட்டது“ என்று சர்வ மதப் பேரவையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.