பக்கங்கள்

14 ஜனவரி 2012

திசாநாயக்கவின் உரையை கூச்சலிட்டு குழப்பிய யாழ்,பல்கலை மாணவர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழத்தில் உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியபோது, முதல் வருட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தாக பல்கலைக்கழக மாணவர் உரிமை செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன கூறினார்.
அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என முத்திரைக்குத்த முற்படுவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் நாம் இலங்கையர் அமைப்பை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன கூறினார். ‘ஒருவரை எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர் என முத்திரைகுத்திவிட்டால் அவரின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவது சுலபமாகும். அரசாங்கம் எம்மை பயங்கரவாதிகள் எனவும் விமர்சிக்கிறது’ என அவர் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியின்றி சிங்களத்தில் உரையாற்ற ஆரம்பித்தபோதும் மாணவர்கள் கூச்சலிட்டதாகவும் அதன்பின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அழைக்கப்பட்டதாகவும் உதுல் பிரேமரட்ன கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.