பக்கங்கள்

18 ஜனவரி 2012

வீடுகளில் உடனடியாக குடியேறுமாறு வேலணை பிரதேச செயலர் கோரிக்கை.

வசதியும் உழைப்பும் மிக்க மக்களைக் கொண்ட கிராமமாக இப்பகுதியைக் கட்டியெழுப்ப நீங்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என வேலணை பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் தெரிவித்தார்.
மண்டைதீவு கடற்படையினர் தாம் தங்கியிருந்த வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் மண்டைதீவு பேதுருவானவர் தேவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்து பேசியபோதே நந்தகோபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
“கடந்த இருபத்தொரு வருடங்களின் பின் நீங்கள் உங்களது சொந்த வீட்டில் குடியிருக்கப் போகின்றீர்கள். இந்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும்போது வீட்டின் சொந்தக்காரர்களிடம் அதனைக் கையளிக்கவேண்டும்.
நீங்கள் உடனடியாகவே குடியேறினால் உங்களது வீடுகளில் உள்ள பொருள்கள் கதவு, ஜன்னல் போன்றவற்றைப் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். அடிப்படை வசதிகள் உடன் நிறைவேற்றப்படவேண்டும் என்ற உங்களது கோரிக்கைகளை வடமாகாண ஆளுநரும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளார். நீங்கள் உங்கள் வீடுகளில் குடியமர்வதன் மூலம் இப்பகுதி துரித வளர்ச்சி அடையும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.