பக்கங்கள்

28 ஜனவரி 2012

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் வெடிபொருட்கள்!

யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பஸ்ஸில் 38 பயணிகள் பயணம் செய்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இருக்கைக்கு அடியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும், வெடிபொருட்களை கொண்டு சென்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
300 கிராம் வெடிபொருட்கள், இலத்திரனியல் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.ஓமந்தையில் பஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.