பக்கங்கள்

08 ஜனவரி 2012

தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணமானவர்களுக்கு அஞ்சலி!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு நாளை மறுதினம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். நகரில் நினைவுத் தூபி அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகிய 10 பேரையும் மனதில் நிறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் தமிழின ஆர்வலர்களைக் கலந்துகொண்டு மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.