பக்கங்கள்

05 ஜனவரி 2012

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக நினைவுச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது!

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவு சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலையின் ஒரு பகுதி சேதமடைந்து இருப்பதாகவும் இச்சிலை வெடிப்புச்சம்பவத்தின் அடிப்படையிலேயே தகர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் இது தொடர்பாக பல்கலைகழக உப வேந்தர் கலாநிதி.என்.எல்.ஏ.கருணாரட்னவிடம் கேட்ட போது, பல்கலைகழகத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் சில மாணவர்களின் முறைகேடான சம்பவமாக இதை கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்கலைகழகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இச்செயலுக்கு இராணுவமே காரணமென மாணவர் தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் வெடிப்பு சம்பமொன்று பல்கலைக்கழக நினைவுச்சிலை மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். சம்பவம் இடம் பெற்றதை தொடர்ந்து உடனடியாக பொலிஸ் அவர சேவை பிரிவு (119) மற்றும் மிரிஹான பொலிஸூக்கு அறிவித்தும் இதுரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சஞ்சீவ பண்டார குற்றம்சுமத்தினார்.
மேலும், சிலைக்கு பாரியசேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டனார்.
இத்தகைய செயலை சாதாரண மாணவர்கள் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் இச்சம்பவத்துடன் இராணுவத்தினருக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ தொடர்பு இருக்கவேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அனைத்து பீட மாணவர்களும் தற்போது வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் வகுப்பிற்கு செல்லப்போவதில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளதாகவும் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.