பக்கங்கள்

17 அக்டோபர் 2013

அநாதரவான நிலையில் பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் அநாதரவான நிலையில் பெண்ணொருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் பாலியல் வல்லுறவின் பின்னராக படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர வயதுடைய குறித்த பெண்மணி கடந்த ஓரிரு நாட்களிற்கு முன்னதாக படுகொலை செய்யப்பட்டு ஆலய தேர் முட்டியினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை வீதியில் அதிக மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் இவ்வாறு சடலம் கிடந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துர்நாற்றம் வீசிய நிலையில் அயலவர்கள் தேடுதல் நடத்திய வேளையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.