பக்கங்கள்

03 அக்டோபர் 2013

படைப்புலனாய்வு பிரிவே பொலிசார் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம்!

ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். ஆனைக்கோட்டை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.நேற்றிரவு பத்து மணியளவில் யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இரு பொலிஸார் மீதே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்தளையைச் சேர்ந்த வஸந்த அபேரத்தின (37) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். ஸ்தலத்துக்கு விரைந்த யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தச் சமபவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த தாக்குதல் படைப் புலனாய்வுப்பிரிவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. வடக்கில் படைகளின் இருப்பினை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான தாக்குதல்
 நடத்தப்படுவது மஹிந்த அரசில் புதிய விடயம் அல்ல. கூடவே தெற்கில் சிங்கள மக்களைக் குழப்பவும் இவ்வாறான தாக்குதல் வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.