பக்கங்கள்

29 அக்டோபர் 2013

புத்தூரில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் இளம் யுவதியொருவரது சடலம் கிணற்றினிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் கிழக்கினை சேர்ந்தவரான அமிர்தலிங்கம் மைதிலி வயது 27 என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றிரவு வழமை போன்று வீட்டினிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவ்வேளையில் தொலைபேசி அழைப்பொன்று கைத்தொலைபேசிக்கு வந்ததையடுத்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் வீட்டிற்கு வெளியே அருகாகவுள்ள புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலைய கட்டிடத்திற்கு முன்னதாகவுள்ள கிணற்றிலிருந்து இவர் சடலமாக மீட்கப்ட்டுள்ளார். இன்று காலை வரை குறித்த யுவதி பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் குடும்பத்தவர்கள் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமகனொருவர் இன்று நண்பகல் குறித்த கிணற்றிற்கு அருகாக சென்றிருந்த வேளை சடலத்தை கண்டு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.