பக்கங்கள்

21 அக்டோபர் 2013

இந்தியப்படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!

newsஇந்திய ஆக்கிரமிப்பு படைகளால் 1987 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்தியசாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச் சுடரை வைத்தியசாலையின் வைத்தியர்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி பவானந்த ராஜா, தாதியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.