பக்கங்கள்

02 அக்டோபர் 2013

முல்லையில் மூவர் வெள்ளைவான் கும்பலினால் கடத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளார்கள் முல்லைநகர் பகுதியில் இளைஞன் ஒருவனும் யுவதிஒருவரும் வெள்ளைவான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளதுடன் மூன்றாம் கட்டைப்பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாயர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். வெள்ளைவான் கும்பலினால் முல்லை நகரில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இளைஞனும் யுவதியும் நாயாற்று பக்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் நாயாற்று பகுதிக்கு அண்மையில் வைத்து குறித்த இளைஞன் விடிவிக்கப்பட்டுள்ளார் கடத்தல் சம்மபத்தில் ஈடுபட்டவர்கள் கொச்சை தமிழும் சிங்களமும் பேசுவதாக கடத்தி சென்று விடுவிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளான். இச்சம்பத்தினை தொடர்ந்து முல்லை நகர்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். சிறீலங்கா அரசின் வெள்ளைவான் கும்பல்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளதாக அங்கிருந்து மக்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை நேற்று முள்ளியவளை மூன்றாம் கட்டை பகுதியில் பேரூந்துக்கு காத்துக்கு நின்ற 33 வயதுடைய கருணாநிதி சிவாசினி என்ற நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அங்கு வந்த வெள்ளை வான் கும்பலினால் கடத்த பட்டுள்ளார் . இவர் முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார் மருத்துவ மனையில் தனது மாதாந்த 19.000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொண்டு வீடு செல்வதற்காக பேரூந்துக்கு காத்து நின்ற வேளையிலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது காவல்துறையில் இவைதொடற்பகா முறைப்பாடு செய்ய பட்ட போதும் இதுவரை இந்த பெண் தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.