பக்கங்கள்

18 அக்டோபர் 2013

நாரந்தனையில் சிறுமியை வல்லுறவு புரிந்தவருக்கு விளக்கமறியல்!

நாரந்தனையில் 14வயது சிறுமியை வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த இளைஞரை 14 நாள் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்,பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இது பற்றி தெரிவிக்கையில்,நாரந்தனையில் 24 வயதுடைய இளைஞரொருவர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கடந்த 12ம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டினை தொடர்ந்து அதே இடத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார்,அவ்விளைஞரை 14நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.