பக்கங்கள்

09 அக்டோபர் 2013

கமலேஷ் சர்மாவும் கூட்டமைப்பும் புதுடெல்லியின் கட்டளைப்படி செயற்படுவதாக குற்றச்சாட்டு!

இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா சிறீலங்காவுக்கு துணைபோக முடியாது . இந்த விடயத்தில் இந்தியா சொல்வதைத்தான் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா நிறைவு செய்து வருகின்றார். இவ்வாறு தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சேகல் அவர்கள். இந்தியாவின் இரகசிய அறைகள் தமிழருக்கு எதிராகவும் இந்தியாவின் அரசியல் அறைகள் தமிழருக்கு உதவிசெய்வது போல் நடித்துவருகின்றது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார் ஈழத் தமிழ் எழுத்தாளர் ஒருவர். . ஈழத்தமிழர் மீதான இனஅழிப்புக்கு துணைநின்ற புது டெல்லி தற்போது சிறீலங்காவை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர். கனடாவின் குற்றசாட்டு கமலேஷ் சர்மா, சிறீலங்கா அரசாங்கம் செய்கின்ற அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தும் வகையில் செயற்படுகிறார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் துணைபோவதாக சேகல் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்திய இராஜதந்திரியான கமலேஷ் சர்மா, சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை உட்பட்ட உரிமை மீறல்களை கண்டுகொள்ளவில்லை என்றும் சேகல் குற்றம் சுமத்தியுள்ளார்.இது பிரித்தானியாவின் காடியன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புது டெல்லியின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து செயற்படுவதாக அமெரிக்க பல்கலைக்கழக்கத்தில் கற்பித்து வரும் பேராசிரியர் கீதா பொன்கலன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.