பக்கங்கள்

18 ஏப்ரல் 2013

பாடசாலை மாணவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலிப் பகுதியில் 19 வயதுடைய மாணவன் ஒருவன் சித்தரைப் புத்தாண்டு தினத்தன்று காணாமற்போயுள்ளதாக பெற்றோரால் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய குலசிங்கம் சசிதரன் என்ற மாணவனே காணாமல் போயுள்ளார். புதுவருட தினத்தன்று மூன்று மணியளவில் வீட்டில் இருந்து மைதானத்திற்கு விளையாடுவதற்காக சென்ற மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பெற்றோர் மைதானத்திற்கு சென்று நண்பர்களிடம் வினவியபோது, கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்த நிலையில் விளையாட்டை இடையில் கைவிட்டு சென்றதாக தெரிவித்தனர். இதன்பின்னர் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தபோதும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.