பக்கங்கள்

07 ஏப்ரல் 2013

புலம்பெயர் தமிழர் விபரம் கோரல் திசை திருப்பும் நடவடிக்கை!

யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடாத்த வெளிநாட்டு உதவிகள் அவசியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தம் இடம்பெற்ற அரசாங்க அதிபர் காரியாலயங்களில் யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. சர்வதேச சமூகத்தையும் நாட்டு மக்களையம் திசை திருப்பும் மற்றுமொரு முயற்சியாகவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தொடர்பான அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் 70000 மக்கள் யுத்த வலயத்தில் சிக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் , பின்னர் 287000 மக்கள் இடம்பெயர் மக்கள் அரசாங்க முகாம்களில் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு தரவுகளைக் கொண்டே சரியான விபரங்களை வெளியிட முடியாத நிலையில் வெளிநாட்டு உதவிகளையும் பெற்றுக்கொண்டால் புள்ளி விபரங்கள் மேலும் குழப்பமாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.