பக்கங்கள்

16 ஏப்ரல் 2013

இடைக்கால நிர்வாக யோசனையாளர்களை தெரிந்து கொண்டதாம் சிங்கள புலனாய்வுப்பிரிவு!

இனப்பிரச்சினைக்கு தீர்வாக விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த 12 பேர் யார் என்ற தகவல்கள் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.நரேந்திரன், எஸ். சிவதாசன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி. சரவணபவன், வினோத் கனகரத்தினம், கே. குருச்சரன், பேராசிரியர் சம்பந்தன், பேராசிரியர் பலாசுந்தரம்பிள்ளை, சாந்தி அபிமானசிங்கம் ஆகியோரே இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க புளொட், டெலோ, ரி.எம்.வி.பி கட்சிகளின் பிரதிநதிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் திவயின கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.