பக்கங்கள்

06 ஏப்ரல் 2013

நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!

வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கண்ணி வெடிகளை
தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்... 
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக
ரசித்தார் உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...
கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும் 
நெஞ்சை துளைத்த குண்டுகளையும்
ஒன்றாகவே பார்த்த வீரன்...
வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும்
மார்பு பசிக்கு குண்டுகளையும்
உண்ட வீரன்... நீ!
பூக்களின் தேசத்தில் போர்க்களம்
புத்தன் கை பிடித்தே
யுத்தம் செய்த ஆரிய அரக்கன்...
புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே
பாலச்சந்திரனின் 'புன்னகையை'
புதைகுழிக்குள் தள்ளியது
வீரமும் ஈரமும் நிறைந்த இனத்தில்
துரோகமும் ஒன்றாகிப் போன
'விஷத்தின்' விரல் பிடித்தே
எங்கள் பாலகனின் மார்பைத் துளைத்தாய்
கரிகாலன் பெற்றெடுத்த
மாவீரனின் மார்பை 'கரு'(னா)நாகத்தின்
துணைகொண்டு துளைத்தாய்
உன் மார்பில் துளைத்தது
தோட்டாக்கள் அல்ல
தமிழின துரோகத்தின் அடையாளம்... 
ஊடுருவிக் கொன்ற துரோகத்தின் 
தலையெடுக்கவே தகிக்கின்றது
மானமுள்ள தமிழர்களின் கரங்கள்...
முடங்கி சுரணையற்றுக் கிடக்கும் 
தமிழ் மூடர்களை முடுக்கிவிட்டுள்ளது
உன் வீர மரணம்... 
நீ பிணமல்ல... சோம்பிக் கிடந்த
தமிழர் இதயங்களை எரியூட்டும் தீ! 
நீ மூட்டிய தீயில் கருகிப் போவார்கள்
'கருணை' இல்லா குருடர்கள் 
உன் சிதைக்கு மூட்டிய தீ
காற்றோடு காற்றாக
கடல் தாண்டிப் பரவட்டும்...
தமிழ் பேசும் நெஞ்சங்கள் எல்லாம்
சுவாசமாய் மாறட்டும்...
எம் மண்ணோடு கலந்துள்ளது
உன் வீர சாம்பல்...
அங்கே முளைக்கும் பயிரும்
பாலகனும் எங்கள் பாலச்சந்திரனாய் பிறப்பான்...
ஆயிரமாயிரம் புதிய
பாலச்சந்திரன்களாய் பிறப்பான்...
அதுவரையிலும்
உன் சாம்பல் பூசி
துரோகிகளின் தோலுரிக்க
எதிரிகளின் உயிரெடுக்க
உலகமெங்கும் துடித்துக் கொண்டுள்ளது
ஈரமுள்ள வீரமுள்ள நல்லோர் இதயங்கள்...

-சே.த.இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.