பக்கங்கள்

08 ஏப்ரல் 2013

செங்கலடியில் விப்ரா மளிகைக்கடை உரிமையாளரும் அவரது மனைவியும் வெட்டிக்கொலை!

மட்டக்களப்பு, செங்கலடியில் இளம் வர்த்தகரும் அவரது மனைவியும் அவர்களது வீட்டில் வைத்து நள்ளிரவு நேரம் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செங்கலடிச் சந்தியிலுள்ள விப்ரா மளிகைக் கடை உரிமையாளரான சிவகுரு ரகு ( 48வயது) மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா (41வயது) ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். செங்கலடி – பதுளை வீதியில் உள்ள இவர்களது வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுதம் தரித்த கும்பல் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளதுடன் கத்தியினால் கழுத்துப் பகுதியில் வெட்டியும் உள்ளனர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு அறையில் கணவன் மனைவியும் இன்னுமொரு அறையில் இரண்டு பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.