பக்கங்கள்

17 ஏப்ரல் 2013

கைதாகிய சிறுமிகளின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்!

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். அந்த ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார். அந்த சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும் வரை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்களா? இல்லையா? என்பது பற்றிய கருத்துக்கள் வெளியிட முடியாதென்றும் அவர் மேலும் கூறினார். அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் பணிப்பு இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுமிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட சிறுவர், அபிவிருத்தி குழு உத்தியோகத்தர்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பணித்துள்ளார். இச்சிறுவர்களின் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார். இவ்வாறு சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், துஷ்பிரயோகம் மேற்கொள்பவர்கள் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், இச்சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீதானதும், அதிகாரிகள் மீதும் உரிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாரிடம் யாழ். அரச அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.