பக்கங்கள்

26 ஏப்ரல் 2013

உயர் பாதுகாப்பு வலயம் குறித்து விசாரிக்க யாழ். சென்ற அமெரிக்கக் குழு!

அண்மையில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் குழு உயர் பாதுகாப்பு வலயங்கள், உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் கீழ் உள்ள தொழிலாளர், மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான பிரிவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் குழு யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. அமெரிக்கக் குழுவினர் உயர் பாதுகாப்பு வலயம், மீள்குடியமர்வு, காணி விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தியதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி மேலும் கூறியுள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் நிலைமைகளில் முன்னெற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இந்தக் குழுவின் பயண நோக்கம் என்று தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.