பக்கங்கள்

05 ஏப்ரல் 2013

புலம்பெயர் தமிழரின் விபரத்தை தேடுகிறது சிறீலங்கா!

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் தகவல்களை திரட்டுவதில் சிறிலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இறுதிக்கட்ட போரின் போது பலியானவர்கள் எண்ணிகையை கணக்கிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதன்படி தமது நாடுகளில் புகலிடம் தேடியவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதற்கு பல மேற்குலக நாடுகள் தயக்கம் காட்டி வருவதால் போரின்போது எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற சரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 2006ம் ஆண்டு முதல் இடம்பெற்ற போரின்போது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, முறைப்படியான விசாரணைக்கு, சிறிலங்காவில் இருந்து எத்தனை பேர் புலம்பெயர்ந்தனர் என்ற சரியான கணக்குத் தேவைப்படுகிறது. 2009 இல் போரின் முடிவில் காணாமற்போனவர்களாகவும், மரணமானவர்களாகவும் கருதப்பட்டவர்கள் பலர் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இவ்வாறான பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் இன்னமும் அவர்களை பொதுமக்களாகவே வலியுறுத்துகின்றனர் என சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.