பக்கங்கள்

17 ஏப்ரல் 2013

யாழ்,குடாநாட்டில் தங்கத்தின் விலை சரிவு!

சர்வதேச சந்தைகளில் தங்க பிஸ்கட்டுக்களின் வருகை குறைவடைந்துள்ளதால் குடாநாட்டில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வர்த்த கர்கள் மேலும் தெரிவித் ததாவது: தங்க பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்யும் விலைக்கு தங்கத்தின் கரட் பெறுமதிக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில் தங்க பிஸ்கட்டுக்கள் சர்வதேச சந்தைகளில் முடக்கப்பட்டுள்ளன. இதனால் இருக்கக்கூடிய தங்க பிஸ்கட்டுக்களை தரம்பிரித்து நகைகள் செய்யப்படுவதால் நகைகளின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைப் பெறுமதிக்கு ஏற்ப குடாநாட்டு நகைக்கடைகளிலும் அதே விலையில் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் இந்தியாவிலும் நகையின் பெறுமதிக்கேற்ப விலைகள் தற்போது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் நகைகளின் விலைகள் குறை வடைந்துள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தோன்றலாம். ஆனால் குடாநாட்டைப் பொறுத்தவரையில் நகை விலைகளில் பெரிதாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனினும் கடந்த 2 மாத காலப் பகுதிக்குள் நகைகள் விற்பனை செய்யப்பட்ட பெறுமதியில் இருந்து தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி நகைக்கடை உரிமையாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஏனெனில் தங்க பிஸ்கட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போது இருந்த விலையும் தற்போதைய விலையும் மாறுபாடு உடையதாகக் காணப்படுவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நகைகளின் பெறுமதி இன்று சந்தையில் என்ன என்பதைக் கூற முடியாது அது நாளுக்கு நாள் மாறுபடும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.