பக்கங்கள்

11 ஏப்ரல் 2013

இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியாது!

மஹிந்த ராஜபக்ஷ பதவியில் நீடிக்கும் வரையில் இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியாது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உதவி வழங்க முடியுமா என கொழும்பு ஊடகமொன்று க்ளோபல் தமிழ் போரம் அமைப்பிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடாத்தும் என்பதில் உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கும் வரையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.