பக்கங்கள்

21 ஏப்ரல் 2013

லண்டனில் மீண்டும்'போர் தவிர்ப்பு வலயம்'

சிறிலங்கா படையினர் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணப்படம் இலண்டனில் வெளியிடப்படவுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது. இந்நடவடிக்கையால் சிறிலங்கா அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு காரணியாக இருந்தது. இந்தநிலையில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் திரையிடப்படவுள்ளது. இலண்டனில் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது சிறப்பம்சமாகும். இது கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.