பக்கங்கள்

16 ஏப்ரல் 2013

பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க அனுமதி கோரி மனு!

balachandran-0001படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க உள்ளோம். எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.