பக்கங்கள்

28 ஏப்ரல் 2013

நவீன கருவிகள் மூலம் ஒட்டுக்கேட்க போகுதாம் புலனாய்வுப்பிரிவு!

தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான நவீன கருவிகளை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கருவிகளின் மூலம் கைத்தொலைபேசி மற்றும் தரைவழித் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். கடந்த ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்தக் கருவிகளின் மூலம், எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தினதும் ஒத்துழைப்பு இல்லாமலேயே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். எனினும், இந்த முறையின் மூலம் தொலைபேசிகளை ஒடடுக் கேட்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் சிறிலங்கா சட்டவாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கும், தனிநபர் உரிமைக்கும் முரணானது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க வேண்டுமென்றால் அதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட வேண்டும் என்று சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் பொதுச்செயலர் சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.