பக்கங்கள்

15 ஏப்ரல் 2013

நெடுந்தீவுக்கான படகுசேவை கட்டுமானம் நடைபெறுமா என்பதில் சந்தேகம்!

நெடுந்தீவு பிரதேச சபை நெடுந்தீவுக் கடல் போக்கு வரத்துக்கு ஈடுபடுத்தும் நோக்குடன் படகு ஒன்றைக் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனினும் அது இப்போது சாத்தியப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிகின்றது. கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் ஏற்கனவே இது தொடர்பாக பிரதேச சபை தனது செயற்பாடுகள் குறித்துத் தெரிவித்திருந்த போதும் சமீபத்தில் இங்கு வந்த டொக்யாட் நிறுவன அதிகாரிகள் படகைக் கட்டுவதற்கு கடற்படை அனுமதிக்க வேண்டும் எனவும் அலுமினியத்தில் படகைக்கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அலுமினியத்தில் கட்டப்படும் படகு நெடுந்தீவுத் துறைமுகத்துள் வரக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று கூறப்படுகின்றது. "நெல்சிப்' திட்டத்தின் நிதி யுதவியுடன் பிரதேச சபை நெடுந்தீவுக்கான படகைக் கட்டத் திட்ட மிட்டிருந்தது. "நெல்சிப்' திட்டத்தில் இந்தப் படகைக் கட்டுவதற்கு ரூபா இரண்டு கோடி நிதி வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.