பக்கங்கள்

27 ஏப்ரல் 2013

திருமணம் செய்வதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி-யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி 12 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்
தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து யாழ். பிறவுண் வீதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஆதிகோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 03 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.