பக்கங்கள்

24 ஏப்ரல் 2013

எட்டு மாதங்கள் கடந்தும் பேசாமல் இருக்கிறார் டக்ளஸ்!

டக்ளஸ் தேவானந்தா 
மூன்று மாதங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் டக்ளஸ் எட்டு மாதங்கள் கடந்தும் அது தொடர்பில் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார். எங்கள் காணிகள் பறிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எங்களை எங்கே கொண்டு சென்று மீள்குடியமர்த்தப் போகிறார் என்று வலி.வடக்கு மக்கள் நேற்றுக் கேள்வியெழுப்பினர். தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுவிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது பிரதேசங்கள் நிரந்தரமாக இராணு வத்தினரால் பறிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஊடகங்களில் வெளியான செய்திகளை நம்ப வேண்டாம். இன்னும் 3 மாதங்களில் அந்தப் பகுதிகள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்படித் தெரிவித்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும எந்தவொரு பகுதியும் விடுவிக்கப்படவில்லை. மாறாக அந்தப் பகுதிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைள் நேற்று முன் தினம் முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். எங்கள் பகுதிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் பொருட்டு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இனி எங்களை எங்கே கொண்டு சென்றுமீளக் குடியமர்த்தப் போகின்றனர் என ஆவேசமாகக் கேட்டனர் வலி.வடக்கு மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.