பக்கங்கள்

08 ஜூலை 2011

அச்சுவேலியில் பெண் மரணம்!கொலையென சந்தேகம்.

அச்சுவேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதான ரவீந்திரன் கிருஷ்ணகுமாரி என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சடலப் பரிசோதனையில் கழுத்தில் காயங்களும் காதின் பின்புறம் நகக்கீறல்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இப்பெண் தூக்கிடுவதற்கான புறச்சூழல் காணப்படவில்லை எனறும் இரவு 9 மணியளவில் தமது தமக்கையாருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார் எனறும் அந்த உரையாடலில் தற்கொலை செய்வதற்கான மனநிலையில் அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.