பக்கங்கள்

26 ஜூலை 2011

கூட்டமைப்பு பிரதிநிதிகள் கிளிநொச்சியில் பதவிப்பிரமாணம்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 193 பிரதிநிதிகள் அடுத்த வாரம் கிளிநொச்சியில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிப்பிரமாண நிகழ்வை வடபகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் திருகோணமலையில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.