பக்கங்கள்

22 ஜூலை 2011

கனடாவால் தேடப்படும் இலங்கையை சேர்ந்த இரு குற்றவாளிகள்.

கனடாவில் வாழும் யுத்தக் குற்றல் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பட்டியலில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜெரோம் பெர்னாண்டோ(Jerome Fernando) மற்றும் குலதுங்க இளந்தாரிதேவகே (Kulatunga Illandaridevage) ஆகிய இலங்கையர்கள் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கனடாவில் வாழ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அந்நாட்டு எல்லை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
யுத்தக் குற்றவாளிகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை கனடா வெளியிட்டுள்ளது.
இந்த நபர்களை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட இணையதளமொன்றை கனேடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்களே அதிகளவில் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.