பக்கங்கள்

15 ஜூலை 2011

தீவகத்தில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் மோசடி.

தபால்மூல வாக்களிப்புகள் 2 தினங்கள் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் தீவகப் பகுதிகளில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அரச அதிகாரிகள் மட்டத்தில் இதனை மறைத்து விட முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீவகப் பகுதிகளின் கட்டுப்பாடு தொடர்ந்தும் ஈபிடிபியிடமும் கடற்படையிடமுமே இருக்கின்றது. இந்த நிலையில் யாழ்க் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து கணிசமான ஆசிரியர்கள் தீவகப் பகுதிக்கு கல்வி கற்பிப்பதற்காக சென்று வருகின்றனர். அவ்வாறு சென்று வரும் ஆசிரியர்களுக்காக விசேட வாக்களிப்பு மையங்கள் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற ஆசிரியர்களே விரட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதை யாழ் செயலக அதிகாரி; உறுதிப்படுத்தியுள்ள போதிலும் அது எங்கு இடம்பெற்றது என்ற தகவலை வெளியிட மறுத்து விட்டார். இதையடுத்து 2ம் நாளாக இடம்பெற்ற வாக்களிப்பின் போது மேற்பார்வை நடவடிக்கைகளை யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபரே முன்னின்று நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் கண்காணிப்புகளை தாங்கள் கூடிய அக்கறை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றதா என்பது தொடர்பாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.