பக்கங்கள்

12 ஜூலை 2011

நயினை நாகபூஷணி அம்பாள் தேர்த்திருவிழா!

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணியம்மன் ஆலயத் தேர்த்திருவிழா எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இத்தேர்த்திருவிழா பௌர்ணமி தினமன்று நடைபெறவுள்ளதால் அதிகளவானோர் வருகைதருவரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனையொட்டி இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் பயண ஏற்பாடுகளும் விசேடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வட பிராந்திய போக்குவரத்துச் சபையும் தனியார் பயணிகள் பஸ்களும் யாழ்ப்பாண பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரையும் அதிகளவு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளன.
வேலணை பிரதேசசபை பக்தர்களுக்காக சுத்தமான நீரை வழங்கவும் நயினாதீவு அபிவிருத்திச்சபை தேநீர் வழங்கவும் அன்னதானம் வழங்க அமுதசுரபி அன்னதானசபையும் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
திருவிழாக் காலத்தில் பயணிகளுக்கு கடல் வழி போக்குவரத்துக்காக நூறு தனியார் போக்குவரத்துப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு கருதி உயர் பாதுகாப்பும் படகில் செல்லும் பயணிகள் அளவையும் கடற்படையினர் குறைத்துள்ளனர்.
அத்தோடு பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதோடு மருத்துவ சேவைகளை சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் வழங்கவுள்ளன.
திருவிழாக்காலங்களில் வருகைதரும் மக்கள் ஆபரணங்கள் அணிவதை குறைத்து கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.