பக்கங்கள்

17 ஜூலை 2011

புலம்பெயர் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை என்கிறது திவயின.

புலம்பெயர்ந்துள்ள புலிகளுக்கு உரிய பதில் அளிப்பதற்காக சுமார் 20 வருடகாலமாக புலனாய்வு பிரிவினரிடம் உள்ள புலிகளின் முகவர்கள் தொடர்பான சுமார் ஆயிரம் ஆவணங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
பல கொலை சம்பங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. புலிகளுக்கு எதிரான இலங்கை தமிழர்களால் இந்த தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் யார் என்பது பற்றியும் தெரியப்படுத்தியுள்ளனர்.
புலிகளின் உறுப்பினர்கள் தமது பெயர்களை மாற்றிக்கொண்டுள்ள போதிலும், அவர்களுக்கு எதிரான தமிழர்கள் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த நபர்களை பற்றி முன்னர் விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர்கள் இலங்கையில் இல்லை என தமது விசாரணை அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
தெரியவந்துள்ள தகவல்களுக்கு அமைய தமது பெயர்களை மாற்றிக்கொண்ட மேற்படி சந்தேகநபர்கள் வெளிநாட்டு கடவூச்சீட்டுகளை பயன்படுத்தி அவ்வப்போது இலங்கை வந்து சென்றுள்ளதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.