பக்கங்கள்

13 ஜூலை 2011

பள்ளிக்கூட மாணவி கர்ப்பம்,சந்தேக நபர் கைது.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பமுற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உருத்திரபுரம் பகுதியில் உள்ள 15 வயதேயான மாணவி ஒருவர் பாடசாலைக்குச் சென்றிருந்த போது வகுப்பில் மயக்கமடைந்துள்ளார். வகுப்பாசிரியரும் ஏனைய மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வைத்திய உதவிக்காகக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு அந்த மாணவியைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அந்த மாணவி எட்டுமாதக் கர்ப்பிணியாக இருக்கின்றார் என்பதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார், அந்த மாணவியுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவருடன் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தமை தெரியவந்திருக்கின்றது.
இதனையடுத்து சந்தேக நபராகிய இளைஞனைக் கைது செய்து விசாரணை செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அவரை சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி வைத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீதான வைத்திய பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.