பக்கங்கள்

13 ஜூலை 2011

அகதிகளை திருப்பி அனுப்பவேண்டுமா?யாகூ நடத்தும் கருத்துக்கணிப்பு.

இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின் தற்போதைய நிலவரப்படி அனைத்துத் தமிழ் அகதிகளையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்ற கருத்தே மேலோங்கிக் காணப்படுகிறது.
கருத்து கணிப்பு:
கேள்வி: நியூசிலாந்து 88 இலங்கை அகதிகள் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் கருத்து எவ்வாறானதாக அமையும்.
1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)
2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)
3. இலங்கைக்கு திருப்பி அனுப்பவும். (Send them home)
4. எனக்குத் தெரியாது. (I don't know)
இதுவரையான (இலங்கை நேரம் காலை 10.50)முடிவுகளின்படி
இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும் என 5231 பேரும், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும் என 3943 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் என 14257 பேரும், எனக்கு தெரியாது என 663 பேரும் வாக்களித்துள்ளனர்.
http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/
நீங்களும் இங்கே சென்று உங்கள் ஆதரவை தமிழ் புகலிடக்காரருக்கு செலுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.