பக்கங்கள்

21 ஜூலை 2011

நீதிபதியின் அனுமதி பெற்றே தமிழினியை விசாரித்தோம்.

சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை விசாரணையொன்றுக்காக நீதவான் அனுமதியுடனேயே பயங்கரவாத விசாரணைப் பணியகத்திற்கு (ரி.ஐ.டி.) கொண்டு சென்றதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) நேற்று கொழும்பு பிரதம நீதவானிடம் தெரிவித்தனர்.
சுப்ரமணியம் சிவகாமி அல்லது தமிழினி எனும் சந்தேக நபரை சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இருதடவை ரி.ஐ.டிக்கு கொண்டுசென்று விசாரணை செய்ததாக அவரின் சட்டத்தரணி மஞ்சுள பதிராஜா நீதவானிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு சி.ஐ.டியினருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீதவான் உத்தரவின் பேரிலேயே ரி.ஐ.டிக்கு விசாரணைக்காக தமிழினி கொண்டு செல்லப்பட்டதாக சி.ஐ.டியினர் நீதவானிடம் தெரிவித்தனர்.
நீதவானின் உத்தரவின் பிரதியொன்றையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் சமர்ப்பித்தனர். இந்நிலையில் இவ்வழக்கை ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.