பக்கங்கள்

09 ஜூலை 2011

நுகேகொடையில் இரு சிங்கள நடிகைகள் கைது.

விபச்சார வலையமைப்பொன்றுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இலங்கைத் தொலைக்காட்சி நடிகைகள் இருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் விபச்சாரத்திற்காக பயன்படுத்தும் தொலைபேசி இலக்கமொன்றை பெற்றுக்கொண்ட பொலிஸார், மேற்படி இலக்கத்துடன் இத்தாலியிலிருந்து வந்த வர்த்தகர் என்று கூறப்பட்ட ஒருவரை வாடிக்கையாளர் என்ற போர்வையில் தொடர்புகொள்ளச் செய்ததன் மூலம் இவர்களை கண்டுபிடித்தனர்.
பிரபல தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் நடித்த மேற்படி நடிகைகள் இருவரும், ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களால் பயன்படுத்தப்படும் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
நுகேகொடை தலவத்துகொட வீதியில் குறித்த போலி வாடிக்கையாளரை சந்திக்க வந்த போதே இந்நடிகைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நடிகைகள் ஒவ்வொருவருக்குமான கட்டணமாக கோரப்பட்ட தலா 15,000 ரூபாவும் செலுத்தப்பட்டது. நுகேகொடை அவசர பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பாத்திய ஜயசிங்க தலைமையிலான குழுவினர் இம்முற்றுகையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நாளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.